நிப்டி ப்யுச்சர் இரண்டு நாட்கள் ஊசலாட்டமாக உள்ளது .காரணம் உணவு பணவீக்கம் குறைந்ததாலும் ,ரிலையன்ஸ் குழுமத்தில் அண்ணன் முகேஷும் தம்பி அணிலும் சேரபோவதாக வந்த செய்தியினாலும் மற்றும் இந்த வருடத்தில் வங்கி கடன்களின் வட்டி விகிதம் 1 .25 % குறைக்க போவதாக கிரெடிட் குயிஸ் நிறுவனம் சொன்ன செய்தியினாலும் பங்கு சந்தை மேல கீழ என்ற ஊசலாட்டம் கொடுத்தது. டெக்னிக்கல் படி 4850 வரை மேல செல்ல வாய்ப்பு உள்ளது.4850 கடந்து முடிந்தால் 5150 வரை மேல செல்லும்.இவைகள் எல்லாம் இருந்தும் ஐரோப்பா நிதி நிலைமை மோசமாக உள்ளதால் சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகமாகவே இருக்கும்.ஆகையால் இந்தநேரத்தில் வணிகம் செய்வது மிகவும் கடினம்.அதாவது மழை வருவதற்கு முன் சில நேரங்களில் சுருள் காற்று அடிக்கும் அந்த நேரத்தில் ஓரமாக ஒதுங்கி பின் செல்வோம் அதுபோல இப்பொழுது உள்ளது.ஆகையால் ஓரிரு தினங்கள் காத்திருந்து செயல்படலாம்.
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first
No comments:
Post a Comment