16-11-2014
இனி நான் தொடர்ந்து எழுத உள்ளேன்.
நான் இது வரை நிப்டி இன் போக்கை மட்டும் தான் அதிக நாட்கள் எழுதி வந்துள்ளேன் .
இனி MUTUAL FUND , LIFE INSURANCE ,STOCKS பற்றி நான் இது சம்பந்தமான BOOK படிப்பதன் மூலமாகவும் என்னுடைய அனுபவங்களை வைத்தும்
பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .
இன்றைக்கு STYLE OF INVESTING என்ற தலைப்பில் பார்போம்.
1, DIVIDEND YIELD STOCKS
2.MOMENTUM STOCKS
3.GROWTH STOCKS
4.VALUE INVESTING STOCKS
என்று நான்கு வித மான CATEGORY உள்ளது .
DIVIDEND YEILD STOCKS
என்பது BANK INTEREST 9% உள்ளது என்றால் அதற்க்கு கிட்டத்தட்ட சமமாகவோ அல்லது கூடுதலாகவோ கிடைக்ககூடிய பங்குகளில் முதலீடு செய்வது.
MOMENTUM STOCKS
பங்கு சந்தையில் அன்றாடம் வரக்கூடிய செய்திகள் அதாவது MERGER ,STOCK SPLIT ,BONUS ,RESULTS,பட்ஜெட், RBI RATE CUT ,HIGH DIVIDEND போன்ற செய்திகள் மூலம் பங்குகள் ஓர் இரண்டு தினங்களுக்கு பங்கின் போக்கு அதிகமான ஏற்ற இறக்கத்தில் வர்த்தகமாகும் இதை பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பது .இதில் அதிகபட்சமாக ஒரு வாரத்திற்குள் லாபம் அல்லது நஷ்டம் எதுவாக இருந்தாலும் EXIT ஆகி விடுவார்கள் .
GROWTH STOCKS
என்பது நீண்ட காலத்தில் நிறைய லாபம் தரக்கூடிய பங்குகள் அதாவது INFOSYS ,CITYUNION BANK ,DR REDDY ,SBI போன்ற பங்குகள். இவைகள் BANK INTEREST க்கு மேலே லாபம் தந்துள்ளது.இவைகளை போல தேர்ந்து எடுத்து முதலீடு செய்வது
VALUE INVESTING STOCKS .
என்பது கம்பெனி நல்லதரமான BACKROUND ல் உள்ளது மற்றும் BOOK VALUE அல்லது REASONABLE PRICE கீழே 20% குறைவாக உள்ள பங்குகளை வாங்குபவர்கள் .இவர்களுக்கு குறைந்த வருடங்களிலே அதிகமான லாபம் கிடைக்கும்.
EXAMPLE .
SATYAM COMPUTUER சுமார் 600 ல் இருந்து 6 வரை இறங்கியது நீங்கள் 6 க்கு வாங்க வேண்டாம் இந்த கம்பனியை TECHMAHINDRA வாங்குகிறது என்ற செய்தி வந்த பொழுது இதன் விலை 60,
கம்பெனி செயல்பாடு நன்றாகத்தான் இருந்தது அதன் தலைவர் செய்த தப்பினால் கம்பெனி விலை அதலபாதாளத்திற்கு வந்தது பின் திறம் வாய்ந்த NEW ENTREPRENEUR TECH MAHINDRA வாங்கியது அப்பொழுது விலை 60.
இந்த நேரத்தில் முதலீடு செய்தவர்களுக்கு இன்று 5 மடங்கு 4 வருடங்களில்.
PAGE INDUSTRIES,ARVIND,டிவிஎஸ் ஸ்ரீசக்ர ,TVS MOTOR,EICHER MOTOR
இவைகள் எல்லாம் மிக குறைந்த விலையில் இருந்து அதிக லாபம் தந்துள்ளது.இவைகளை போல எதிர்காலத்தில் தரக்கூடிய பங்குகளை
தேர்ந்தெடுப்பது.
மேலே சொன்ன அனைத்தையும் படித்திருப்பிர்கள் இப்பொழுது நீங்கள் எந்த வகையினை சேர்ந்தவர் அல்லது நீங்கள் புதியவரா எந்த வகையால் நீங்கள் உங்கள் லாபத்தை அதிகபடுத்த உள்ளீர்கள்.
எந்த ஒரு தேடலிலும் ஒரு திட்டம் வேண்டும் .திட்டமில்லை என்றால் எதுவுமே சரியாக வராது.பின் வருத்தபடுவதில் அர்த்தமேயில்லை.
விவேகானந்தர் சொல்லின் படி உங்கள் நோக்கத்தை முதலில் தீர்மானியுங்கள் அதுவே இலக்கு என்பதை உறுதி செய்யுங்கள் பின் உங்களுக்கு கிடைக்ககூடிய லாபம் சந்தையின் ஏற்ற இறக்கதினால் பதிக்காமல் கிடைத்தே தீரும்.
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first